ETV Bharat / bharat

ஜம்முவில் பாஜக பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்

ரஜோரியில் உள்ள பாஜக பிரமுகரின் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

author img

By

Published : Aug 13, 2021, 1:58 PM IST

Rajouri
குண்டுவெடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் ஜஸ்பிர் சிங்கின் வீட்டில் நேற்றிரவு வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக ரஜோரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை, மல்புரா மிர் பஜார் காஜிகண்ட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆளே இல்லாமல் தனியாக வந்த பைக்: அதிர்ச்சி காணொலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் ஜஸ்பிர் சிங்கின் வீட்டில் நேற்றிரவு வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக ரஜோரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை, மல்புரா மிர் பஜார் காஜிகண்ட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆளே இல்லாமல் தனியாக வந்த பைக்: அதிர்ச்சி காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.